24 ஜனவரி, 2009

அன்பே

அன்பே
ஆருயிரே
இன்பமெனும் பெருங்கடலில்
ஈன்றெடுத்த நல்முத்தே
உலகுக்கு ஒளிதர முத்திருக்கு
ஊஞ்சலில் பவனிவர
என்னவள் நீயிருக்க
ஏதும் கூறா நிலையில் நானிருக்க
ஐயமின்றி நீ சிந்தியபுன்சிரிப்பை
ஒருமுறை பார்த்தாலும்
ஓராயிரம்முறை கேட்கதூண்டும்
ஔவை மொழிபோல்
அஃது என்உள்ளத்தில் பதிந்ததா(ல்) (எது)
என தெரியா புதுமொழியான என் அன்பு மொழியுடன்
என்னுயிர் நீதான் என கூறும்
ராஜா முஹம்மது

20 ஜனவரி, 2009

எனக்காய்

எனக்காய் இதயக்கதவை இன்பமாய் திறந்தவள்
இடையூறு வருமென இடறியதுபோல் நடித்தவள்

இதயத்திலோ ஓசை
மனதிலோ ஆசை - காதல்
சொல்லவோ பேராசை

ஆழ்கடலில் முத்துச்சிப்பி - உன்
ஆழ்மனதில் என் காதல் சிப்பி

இருட்டிலே வைரம் மின்னும் - உன்
இதயத்தில் என் காதல் மின்னும்

எனக்குத்தெரியும் உன்காதல் பற்றி - என்
இளமைக்குத்தெரியும் நீ அதை (எதை) மறைப்பது பற்றி

காதலுடன்
உன்
ராஜா முஹம்மது

19 ஜனவரி, 2009

எங்கு சென்றாலும்

எங்கு சென்றாலும் என்நிழல் உன்னோடு
தங்குமிடமெல்லாம் உன்நினைவோடு
செல்லும் பாதை முரடாயுருக்கலாம்
செல்லும் நீயுமா முரடு
உன் வழியில் வந்த - என்
உள்ளமல்லவா காயம் பட்டது
காயத்துடன்
ராஜா முஹம்மது